நாட்டுக்கே உழைத்த வல்லவர்
–டாக்டர் அம்பேத்கர்
பேரா.முனைவர் க கணேசன், கொட்டாரம்
தொகையறா
சாதியின் பிறப்பிடத்தை
சரியாக
கண்டவரு
ஆரிய
மனுதந்திரத்தின்
ஆணிவேரை
அசைத்தவரு
சமத்துவ சூரியனாய்
சட்ட
ஒளி தந்தவரை
சாதியெனும்
கைக்குடைக்குள்
மறைத்திடல்
முடியாது
பல்லவி
யாரு
யாரு அம்பேத்கரு-இந்த
நாட்டுக்கே
உழைத்த வல்லவரு ( யாரு)
சரணம் 1
வேளாண்
நிலத்தையெல்லாம் அரசு உடைமையாக்கி
கூட்டுப்பண்ணை
விவசாயம் வேண்டுமென்றார்
அனைவரும்
உழைத்து உற்பத்தியை பெருக்கி
ஏற்றத்
தாழ்வு அரக்கனை வீழ்த்திடச் சொன்னார்-இங்கு
ஏற்றத்
தாழ்வு அரக்கனை வீழ்த்திடச் சொன்னார்
சோசலிச கனவு மனதினிலே
சுயநலம் காலின் தூசிபோலே (யாரு)
2
எட்டு
மணிநேர வேலைச் சட்டம்போட்டு
மேதினத்தின்
தியாகத்துக்கு மகிமை தந்தார்
தொழிலாளர்
அவலங்கள் போக்கிடச் செய்யும்
வேலைநிறுத்த
உரிமையை உறுதி செய்தார்-நாட்டில்
வேலைநிறுத்த
உரிமையை உறுதி செய்தார்
தனியார் உடைமையை ஒழித்திடவே
அரசே தொழிற்சாலை நடத்தச் சொன்னார் (யாரு)
3
பிற்படுத்தப்
பட்டோர் கல்வி வேலைக்கு
பாராளுமன்றத்தில்
முழக்கமிட்டார்
மகப்பேறு
விடுப்பு சட்டம் போட்டு
மகளிரின்
துன்பத்தை துடைத்தெறிந்தார்-இங்கு
மகளிரின்
துன்பத்தை துடைத்தெறிந்தார்
பெண்ணுரிமை மசோதா தோற்றதாலே
மந்திரி பதவியை தூக்கியெறிந்தார் (யாரு)
4
கொள்ளை
அடித்திடும் தனியார் வங்கிகளை
நாட்டுடைமையாக்கக்
குரல் கொடுத்தார்
எல்
ஐ சியை அரசின் ஏகபோகமாக்கி
அனைவருக்கும்
காப்பீடு போடச் சொன்னார்- வயது
வந்தோருக்கு
காப்பீடு போடச் சொன்னார்
இந்திய நதிகள் அனைத்தையுமே
தேசத்தின் சொத்தாக ஆக்கச் சொன்னார் (யாரு)
5
சாதி
எனும் பேயை சாய்த்து ஒழித்திட
புறமண
முறையே சிறந்ததென்றார்
ஆதியிலே
உதித்தமொழி தமிழ்மோழிதா னென்று
ஆராய்ந்து
முடிவுரை எழுதியவர்-ஆதி
நாகர்கள்
பேச்சுமோழி தமிழேயென்றார்
சனாதன முறையை மோதி மிதித்தே
சமதர்ம புத்தத்தை தழுவியவர் (யாரு)
6
அதிக
பலத்துடனே சோசலிசவாதிகள்
ஆட்சியைப்
பிடிப்பார்க்கள் என்றே சொன்னார்
சாதீயம்
ஒழித்த சமத்துவமே
இந்தியாவின்
சோசலிசம் என்றே சொன்னார்
அவர்களால் சமத்துவம் வலிமைபெறும்-என்று
ஆவேசமாகவே கர்ஜித்தவர் (யாரு)
Comments
Post a Comment